4 Nov 2013

நாங்கள் மகிழ்ந்த தீபாவளித் திருநாள்



உறவுகள் நாங்கள் ஒன்றாய் இணைந்து
ஒருவருக்கு ஒருவர் உணர்வுகள் கலந்து
மாறி மாறி பரிசுடன் புத்தாடை வழங்கி
முந்தை நிலை நினைந்து மகிழ்வதும் அழுவதும்
புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து
எங்கள் இதயத்தை எரித்து எமலோகம் சென்ற
அத்தனை உயிர்க்கும் அவிர்ப்பாகம் கொடுத்து
நான் முதலாக வருவோர்க்கெல்லாம் உவந்தமுதளிக்கும்
அன்னலட்சுமிக்கும் ஜெயலட்சுமிக்கும் வாழ்த்துகூறி
வரவிருக்கும் கிரகலட்சுமிக்கு வரவேற்பு கூறி
பல்சுவை உணவைப் பகிர்ந்துண்டு
சுவைமிகு சொற்போர் பல நடத்தி
மகிழ்ந்த தீபாவளித் திருநாளே!


                           - N.பிரபா பிரேம்குமார்

தீபாவளியை முன்னிட்டு எங்கள் இல்லத்திற்கு வந்திருந்த எங்கள் சித்தி திருமதி.N.பிரபா பிரேம்குமார் அவர்கள், எங்களோடு மகிழ்ந்திருந்த போது வடித்த கவிதை.

இடையே அன்னலட்சுமி என்று எனது மனைவிக்கும், ஜெயலட்சுமி என்று எனது தம்பியின் மனைவிக்கும் வாழ்த்து கூறி, எனது  கடைசி தம்பிக்கு வரவிருக்கும் மனைவிக்கு வரவேற்பு கூறியிருக்கிறார்.

சொற்போர் எங்கள் வீட்டில் தினமும் நடைபெறுவதுதான்.

நினைத்த நொடியில் பாட்டெழுதும் ஆற்றல் பெற்றிருந்தும், பெண் என்ற காரணத்தால் உலத்தின் பகட்டு வெளிச்சத்தில் மறைந்திருக்கிறார் எனது சித்தி திருமதி. N.பிரபா பிரேம்குமார்